Mon. May 20th, 2024

முதலமைச்சர் பழனிசாமி இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது

மக்கள்தான் முதல்மைச்சர் என்றும், மக்கள் சொல்வதை செய்யும் வேலைக்காரனாகதான் தான் பாடுபட்டு வருவதாகவும் கூறினார். பெண்கள் முன்னேற்றத்திறகாக தமிழக அரசு அமல்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், சாதிக்காகவும், மதத்துக்காவும் இல்லாமல் பொதுவான ஆட்சியை அ.தி.மு.க அரசு நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், குறுகிய எண்ணம் கொண்ட கட்சி திமுக தான் என்றும் அதிமுக பரந்த எண்ணம் கொண்ட கட்சி என்றும் கூறினார். சிலர் மதத்தின் அடிப்படையிலும் ஜாதியின் அடிப்படையிலும் வாக்குகள் பெற முயற்சிப்பதாகவும், ஜாதி, மத ரீதியில் சிலர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் மறைமுகமாக தி.மு.க.வையும் காங்கிரஸையும் முதலமைச்சர் தாக்கினார்.

அதிமுக பொறுத்தவரை மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அல்ல. எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி, ஜெயலலிதாவின் ஆட்சியிலும் சரி, அனைத்து ஜாதி, மதத்தினருக்கும் அதிமுக அரசு பாதுகாப்பாக இருக்கும். அதில், எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு தொடர்ந்து பயணிக்கும் என்றும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தெடர்ந்து அவர் திருப்பத்தூரிலும் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.