Mon. May 20th, 2024

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ 5 கோடி ஒதுக்கீடு.

இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்குகள் நிறைவடைந்த பிறகு, இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500லிருந்து ₹10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000ல் இருந்து ₹12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தபடும்.

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும்.

முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது; இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்.

இவ்வாறு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.. இந்த விதியின் கீழ் முதல்வர் வெளியிடும் இரண்டாவது அறிவிப்பு இது…