Sat. May 18th, 2024

தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கென்று தனிச் சிறப்பு வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் முதல்முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்களை விரிவாக எடுத்துக் கூறினார், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…..

சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம்

வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

உணவு தானிய பயிர்கள், தென்னை, கரும்பு, பருத்தி, சூர்யகாந்தி பயிர்களில் தேசிய அளவில் முதல் 3 இடங்களில் தமிழகம் இடம்பெற வழிவகை செய்யப்படும்.

வேளாண் தொகுப்பு திட்டம், மானாவாரி நில மேம்பாடு, இயற்கை விவசாயம் உள்ளிட்ட 16 திட்டங்கள் மூலம் இலக்கை அடைய வழிவகை மேற்கொள்ளப்படும்.

சாகுபடி பரப்பு 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்தப்படும்.

தரிசு நிலங்களை மாற்றிட குளங்கள், பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற நீர் ஆதாரங்கள் பெருக்கப்படும் – எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.


நெல் ஜெயராமனுக்கு சிறப்பு…

நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.

கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்.

இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம்.

தமிழ்நாட்டில் விவசாயம் நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்.

மரபுசார் வேளாண் அருங்காட்சியகம்.

வேளாண்மையின் பெருமையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள சென்னையில் மரபுசார் வேளாண் அருங்காட்சியகம்.

பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு.

பனை வளர்ப்பில் ஆர்வம்..

தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்.

76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்.

பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.

காய்கறிகளை குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2,000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டர் பரப்பில் காய்கறி பயிரிட மானியம்.

அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம்.

குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய 2 லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த முடிவு; இதன்மூலம் கரும்புக்கு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்.

வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்……

செம ஜாலி மூடில் அமைச்சர்…..

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அறிவித்த உழவர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கைதட்ட கேட்டுக் கொண்டார்.

நல்லா கை தட்டி பாராட்டலாமே என்று உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார் அமைச்சர்.

கரும்பு விவசாயிகள் பயன்பெறும் அறிவிப்பை நல்லா பாராட்டலாமே என்று கேட்டுக்கொண்டார் அமைச்சர்.

பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.