Mon. Apr 29th, 2024

பிரபல இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.

அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரைக்கலைஞர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்படடா படக் குழுவினருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.

முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக ஊடகங்களிலும் சார்பட்டா படத்தை புகழாத பிரபலங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பா.ரஞ்சித்திற்கு வானாளவிய புகழாரம் கிடைத்து வருகிறது..


அதன் தொடர்ச்சியாக உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு வியந்து போய், சார்பட்டா படக் குழுவினரை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் முதல் நடிகர் ஆர்யா உள்பட அனைத்து பங்கேற்பாளர்களையும் தனித்தனியாக பெயர் சொல்லி,அவர்களின் திறமைகளை வெளிப்படையாக புகழ்ந்துள்ளார் கமல்ஹாசன்.

தவிர்க்கமுடியாத வெற்றிப்படத்தை கொடுத்த இய1க்குனர் பா.இரஞ்சித், மற்றும் குழுவினருக்கும், இதில் நடித்த நடிகர்கள் தொழில் நுட்பகலைஞர்களுக்கும் உலக நாயகனின் வாழ்த்து பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள் குழுவினர்.

சார்பட்டா படத்தில் தான் பார்த்து ரசித்த, வியந்த காட்சிகளையும் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன், பா.ரஞ்சித் வழங்கிய அப்படத்தின் திரைக்கதை புத்தகத்தை வாங்கி, ஒவ்வொரு பக்கத்தையும் பொறுமையாக புரட்டிப் பார்த்து, தன் மனதில் நங்கூரமாக பதிந்துவிட்ட வசனங்களி, காட்சிகளை எல்லாம் ஆச்சரியம் குறையாமல் பகிர்ந்துள்ளார்.

உலகநாயகனுடனான சந்திப்பும், அவரின் மனம் திறந்த பாராட்டும், சார்பட்டா படத்தை ஆழ்ந்து பார்த்து ரசித்துள்ள அவரின் ஈடுபாடும், மிகப்பெரிய கலைஞனாக உயர்ந்துவிட்ட பிறகும், ஒவ்வொரு கலைஞரினின் உழைப்பை அங்கீகரிக்கும் மிகப்பெரிய மனம் படைத்தவராக கமல்ஹாசன் இருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது என்கிறார்கள், கமல்ஹாசனை சந்தித்துவிட்டு வந்து தொழில்நுட்ப கலைஞர்கள்….