Sat. May 18th, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தலைசால் தமிழர் விருதை நடப்பாண்டில் அறிமுகப்படுத்தியது. முதல் விருதை சுதந்திர போராட்ட தியாகிவும், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முதன்மையானவருமான என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது. விருதுடன் பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி, பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசு அறிவித்துள்ள விருதுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட என்.சங்கரய்யா, அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கு திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பால் நெகிழ்ந்துப் போன முதல்வர் மு.க.ஸ்டாலின், என்.சங்கரய்யாவின் மனிதநேயத்தை பாராட்டி,தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.