Tue. Apr 30th, 2024

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வை இணக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திரும்ப திரும்ப திருவாய் மலர்ந்து வருகிறார் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார். அவருக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க. ஆட்சியின் தலைமைப்பீடத்தில் உள்ள முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அனைவருக்கும் எச்சரிக்கும் விடும் விதமாக இன்றைய நமது எம்.ஜி.ஆரில் ஒரு பக்க கட்டுரை வெளியாகியுள்ளது.

உஷாரய்யா… உஷாரய்யா….

இன்றைய நமது எம்.ஜி.ஆரில்.. வச்சு செஞ்சிருக்காங்க…

சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப் போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் கருத்து.

எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகிவிடும் என்றும், பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும்!

சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்த தியாகத் தலைவிக்கு காட்டும் விசுவாசும் இது தானா ?

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்று, நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்கள் சரித்திரத்தில் நம்பிக்கை துரோகிகள், பச்சோந்திகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் கடும் விமர்சனம்.

அதிமுக – அமமுக இணைப்பிற்கும் மறைமுக அழைப்பு.