தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார் .
மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் பி. ஆர். பாண்டியன்….
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சட்டவிரோத நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. பிரதமர், ஜல்சக்தித்துறை அமைச்சர் தொடர்ந்து கர்நாடகாவில் அரசியல் லாபம் கருதி மறைமுக ஆதரவு ஆதரவளித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட விடாமல் முடக்கி வருகின்றனர். நிரந்தர தலைவர் நியமனம் செய்யவில்லை. இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உட்கட்சி பூசலால் பதவியை ராஜினாமா செய்யும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கும்,உட்கட்சி பிரச்சினையைத் திசை திருப்புவதற்கும் மேகதாது அணை கட்டுமான பணியை தீவிரப்படுத்தும் நோக்கோடு செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே காவிரி போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் சித்தராமையா சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த கொடும் குற்றவாளிகள் 1000 க்கும் மேற்ப்பட்ட
குண்டர்களை விடுவித்து பேருந்துகளுக்கு தீ வைப்பு,தமிழர்கள் சொத்துக்களை சூறையாடியது உள்ளிட்ட மிகப் பெரும் கலவரத்தை நடத்தியது. அதனை பின்பற்றி தற்போதைய எடியூரப்பா அரசும் தீவிர கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எங்களது கோரிக்கையை ஏற்று குடியரசு தலைவரை சந்தித்து உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமனம் செய்திடவும், தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும்.மேகதாது அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துவதை வரவேற்கிறோம்.
இச்சந்திப்பை ஏற்று வரும் ஜூலை 26ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். கர்நாடகாவில் கலவரம் நடத்துவதற்கான சதித்திட்டம் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் தமிழக முதலமைச்சர் முறையிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
டெல்லியில் நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்திற்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்கி கோரிக்கையின் நோக்கத்தை உணர்ந்து பாராளுமன்றத்தில் சட்டத்தை கைவிட அறிவிப்பு செய்திட வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு முழு ஆதரவு அளித்து பங்கேற்ப்போம் என்றார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார் .