Sat. Apr 27th, 2024

யாருடைய தயவும் அதிமுக கட்சிக்கு தேவையில்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா என்பவர் யார் ? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்?

அதிமுக யார் தயவிலும் இல்லை. அதிமுக யாரையும் நம்பி இல்லை.

இது ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பியே இருக்கிறது.

அதிமுக தோல்வியடைந்தாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக சமூக வலைத்தளம், மொபைல் வழியாக மிரட்டல் விடுப்பதாக சசிகலா மீது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.