Sat. Apr 27th, 2024

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாட்டூர் கிராமத்தில் உள்ள மஹாசித்தர் ஸ்ரீ கோடி தாத்தாஸ்வாமி அருளிய 13ம் ஜோதிர்லிங்கம் பொன்முடி சூர்யநந்தீஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டு முழுவதும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுவதுடன், ஸ்ரீ கோடிதாத்தா ஸ்வாமியின் சிறப்பு அருள் தரிசனமும் நடைபெறுகிறது. அதேபோல, அமாவாசை, முழு நிலவு ஆகிய சிறப்பு நாட்களிலும் 13 ஆம் ஜோதிர் லிங்கத்திற்கும், சூர்யநந்தீஸ்வரர் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சிறப்பு வழிபாட்டு நாட்களில், ஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமியின அருள் ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ( இன்று 10.06.2021 )வியாழக்கிழமை அமாவாசையொட்டி சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. கொரோனோ தொற்று கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்ததால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தேவஸ்தான ஊழியர்களுடன் மட்டும் ஆராதனைகள் நடைபெற்றது. இன்றைய தின உபயதாரராக பொறுப்பு ஏற்றிருந்த பெங்களூரைச் சேர்ந்த பக்தர்கள் சூர்யா மற்றும் ஜோதி குடும்பத்தினரின் சார்பில் ஆராதனைகள் நடைபெற்றதுடன், பிரசாரமும் வழங்கப்பட்டன.