Sun. May 19th, 2024

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு மார்ச் 3ம் முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கொரோன இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக கடந்த 24 ஆம் தேதி தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.

அந்த முழு ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊரடங்கின்போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இ- பதிவு முறை அவசர காரணங்களுக்காக என்றாலும் பலர் எளிதாக ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு தேவையின்றி நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதால் கொரோனா பரவல் அபாயம் இருப்பதாகவும், நீலகிரி மாவட்டத்துக்கு வருவர்களுக்கு இ- பாஸ் கட்டாயம் என்று உத்தரவிடக்கோரி தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை ஏற்ற முதல்வர், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு அவரச காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ- பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன்படி இந்த நடைமுறை நாளை(ஜூலை 7 ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.