Sun. Apr 28th, 2024

தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி வரை 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றும், இன்றும் கொரோனோ பாதிப்பு 30 ஆயிரத்தை கடக்காமல் 1500 பேருக்கு மேல் பாதிப்பு குறைந்து வருகிறது.

நேற்று கொரோனோ பாதிப்பு 28,864 பேர் என்று இருந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து 27,936 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால், உயிரிழப்பு மட்டும் 500 ஐ நெருங்கும் வகையிலேயே இன்றைக்கும் இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 478 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்றைய பாதிப்பு 2,596 என்ற நிலையில் குறைந்துள்ளபோது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. 3,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 91 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் 39 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என்பது ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

மாவட்டம் வாரியாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரம் இதோ…