Fri. May 17th, 2024

சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரானா சிறப்பு தற்காலிக சிகிச்சை மையம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரானா தொற்று சதவீதம் அதிகரித்து வருகிறது தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பி வழிவதால் மேற்கொண்டு நோயாளிகளை அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .

இதனைக் கருத்திற் கொண்ட கொண்ட மாவட்ட நிர்வாகம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிக சிகிச்சை மையத்தை ஏற்படுத்த முடிவு செய்தது இதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வந்தது

இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடியும் தருவாயில் உள்ளது இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தொடர்ந்து சிகிச்சை மையத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்ட முதலமைச்சர் அங்கு அமைக்கப்பட்டுள்ள அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு
பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஆக்சிஜன் சிகிச்சை மையத்தில் 500 பேர் ஒரே சமயத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மருத்துவ வசதி பெரும் வகையில் விசாலமான படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது

இன்னும் ஒரு சில நாட்களில் இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் இந்த 500 படுக்கை வசதிகள் முழுமையாக நோயாளிகளுக்கு கிடைக்குமானால் சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலை உருவாகும் என்பது நிதர்சனமான உண்மை .

சேலம் மாவட்ட மக்களுக்கு அரிய வாய்ப்பாக இந்த மருத்துவ வசதி கிடைத்துள்ளது சேலம் வாழ் மக்களின் உயிர் பலி எண்ணிக்கைyயை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல இந்த நிகழ்ச்சியில் சுவர் துறை அமைச்சர் சுப்பிரமணியம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…

ஆரம்ப சுகாதார நிலையில் முதல்வர் திடீர் ஆய்வு….

முதலமைச்சர் இன்று(20.05.2021) சேலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பணியிலிருந்த மருத்துவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்கள். இம்மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவுகளில் உள்ள வசதிகள் குறித்தும், கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவர்களிடம்
கேட்டறிந்தார்.