Tue. Jun 10th, 2025

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய சிறப்பு உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் சிறிது காலம் அமைதியாக இருந்தார். பின்னர் ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரது பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட சொகுசு அவர், அவரின் மறைவுக்குப் பிறகு திரும்ப பெறப்பட்டதாக ஒரு பேச்சும் உண்டு.

தற்போதைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பூங்குன்றனுக்கு உரிய மரியாதை வழங்காமல் அவமானப்படுத்திய பல நிகழ்வுகள் உண்டு அவருக்கு நெருக்கமான பல நண்பர்கள் கூறியதுண்டு.

இப்படிபட்ட சூழலில் அதிமுக.கட்சி செயல்பாடுகளில் இருந்து அவர் முழுமையாக ஒதுக்கியிருந்தாலும் கூட, அதிமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும் என அவர் குரல் கொடுத்துள்ளார். அதை வீடியோவிலும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.