Fri. Apr 26th, 2024

நாம ஒரு பொருளை மறைத்து வைக்க எதுக்கு நடுவிலேயாவது வைப்போம் இல்லையா அது போல திருவள்ளுவர் ஒரு முக்கியமான குறளை ஓளிச்சிவைச்சிருக்கார். அதைப் பற்றி இப்போ பார்க்கலாமா?
நமக்கு தெரியும் மொத்தக் குறள்களின் எண்ணிக்கை 1330. அதில் பாதி = 665.
இது தெரியாதா எனக்குன்னு கேட்கறீங்க ? கொஞ்சம் பொறுத்துக்குங்க!
நாம நினைத்தது நடந்ததுன்னா ! —ஓஹோ இல்லையா
நாம நினைத்ததெல்லாம் நடந்ததுன்னா ! — ஓஹோ ஹோ ஹோ …
நாம நினைத்ததெல்லாம் நாம நினைச்சா மாதிரியே நடந்ததுன்னா!— பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கே!
அந்த ரகசியத்தை தான், நம்ப திருவள்ளுவர், குறள் 666 லே வைச்சிருக்கார்!
அந்தக் குறள்:
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

(திண்ணியர்-உறுதியுடையவர்)

(If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it)

நமக்கு ஒன்னு நாம நினைச்சா மாதிரியே கிடைச்சா எப்ப்புடியிருக்கும்!
நன்றி.


மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள்
அன்பு மதிவாணன்

One thought on “தினம் ஒரு திருக்குறள்”
  1. மிகவும் அருமை திரு. மதிவாணன்

Comments are closed.