Sat. May 18th, 2024

நல்லரசு தமிழ் செய்திகளில் காலையில் குறிப்பிட்டிருந்த படி, அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி உறுதியானது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்வில், அ.தி.மு.க தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், பா.ம..க தரப்பில், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி , ஆகியோர் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தொகுதிகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடுகிறது என்பது நினைவுக்கூறத்தக்கது. அப்போது, பாமக.வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.