Sat. May 18th, 2024

தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்.

மதுரை உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்பட பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு- தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

முதலமைச்சர் நன்றி

சட்டப்பேரவையில் முதலமைச்சர் இன்று நிறைவுரையாற்றினார். சோதனை நேரத்தில் பக்க பலமாக, உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம். அரசுக்கு துணையாக இருந்த துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி என்று கூறினார், முதலமைச்சர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து, சென்னை மெரினா கடற்கரை ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அமைச்சர் உள்ளிட்டோர் ஜெ. நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

nவலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்..

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதும், இன்று 3ஆவது நாளாக நீடித்து வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மல்லாடி கிருஷ்ணாராவ் நீக்கம்:

புதுச்சேரியில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மல்லாடி கிருஷ்ணாராவ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏனாம் தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மல்லாடி கிருஷ்ணாராவை நீக்கி காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.