Tue. May 21st, 2024

பள்ளிகள் திறப்பதற்காக மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிக்காக நிதி வசூலில் ஈடுபடக் கூடாது என்று பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு….

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளிகள் வரும் 13-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது. பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு தலைமைச் செயலாளர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.