Sat. May 18th, 2024

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவரும் தலைமை நிலையச் செயலாரும் பூச்சி முருகனின் புதல்வி எம்.அருணா(எ) ஸ்ரீ மற்றும் எம். அசோக் சக்கரவர்த்தி ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது

. திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மங்கல நாண் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


இந்தியாவிலேயே சிறந்த முதல் அமைச்சர் என என்னை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அது எனக்கு பெருமை அல்ல. நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறேன். புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் நினைவாக எனக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. என்னுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் பெயரையே தந்தை கலைஞர் சூட்டினார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


பூச்சி முருகன் இல்ல திருமண விழாவில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரை வழங்கினார். திமுக பொருளார் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, க.பொன்முடி, துணைப் பொதுச் செயலாளர்கள் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் ப. செல்வராஜ், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், ஆ. ராசா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.