Mon. May 20th, 2024

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பலம், யதார்த்தத்தை உணர்ந்து தி.முக. கூட்டணியில் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்றும் நாளை மறுநாள் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாடு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள அனைவரும் பங்கேற்கவுள்ளதாக டி.ராஜா தெரிவித்தார்