Sat. May 18th, 2024

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவி, விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.


இதேபோல, சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் திரண்ட அதிமுகவினர், திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.