Sun. May 5th, 2024

பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று அறிவித்த நவம்பர் 1 ஆம் நாளை, தமிழ்நாடு பிறந்தநாளாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர்.

அதனையடுத்து, நவம்பர் முதல் தேதியை, தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரின் அறிவிப்பை பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட ஜூலை 18 ஆம் தேதியைதான் தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மீண்டும் ஜூலை 18 ஆம் தேதிதான் தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: