Fri. Mar 29th, 2024

ஜெயலலிதா நினைவிடத்திற்கு 8 மாதங்களாக எட்டிப்பார்க்காத சசிகலா நேற்று வந்துள்ளார், இனி அடுத்த ஆண்டு தான் வருவார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது.

சிறையில் இருந்து வந்து 8 மாதத்திற்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது ஏன்? இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன்விழா நடக்கும் போது வெளியே வருவது ஏன்? இனி அடுத்த ஆண்டு தான் வருவார்.

புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன புரட்சி செய்தார்? எம்.ஜி.ஆர் தான் புரட்சித்தலைவர், ஜெயலலிதா தான் புரட்சித்தலைவி. அதிமுக பொன்விழா எழுச்சியுடன் நடைபெறுவது சசிகலாவிற்கு பிடிக்கவில்லை. கல்வெட்டில் பெயர்போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா?

இவ்வாறு ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.