Sun. May 19th, 2024

தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட காவல் துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்து ஓராண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு செல்லவுள்ள காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி முகாமை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.