Tue. May 14th, 2024

நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்…

தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 5 லட்சம் நிதியை நேரடியாக கொடுத்தார், நடிகர் வடிவேல்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்..

ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்திலேயே மிக சிறப்பாக செயல்பட்டு உலகமே உற்று பார்க்கும் வகையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் முதல்வர்.

முதல்வரின் ஒவ்வொரு செயல்பாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

யார் மனதையும் புண்படுத்தாமல் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் நெகிழ வைக்கிறது.

கேள்வி – திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பின்னர் தான் படங்களில் நடிப்பது குறைந்தது. இப்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ளதால் உங்களை அதிக படங்களில் பார்க்க முடியுமா?

பதில் – நல்லதே நடக்கும்.

கேள்வி – மக்களுக்கு சொல்ல விரும்புவது?
பதில் – ஒரு படத்தில் அல்வா வாசு என்னிடம் வந்து தெரிஞ்ச டாக்டர் கிளினிக் திறந்திருக்கார். ஒரு ஊசி போட்டு போங்க… என்று அழைப்பார். அதுபோல மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன்.

கேள்வி – கொங்கு நாடு கோரிக்கை பற்றி?
பதில் – நல்லா இருக்க தமிழ்நாட்ட எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நான் அரசியல் பேசல.. ஆனா இதெல்லாம் கேட்கும் போது தலை சுத்துது. நல்லா இருக்குற தமிழ்நாட்டை தனித் தனியாக பிரித்தால் என்ன ஆவது?

இவ்வாறு வடிவேல் தெரிவித்துள்ளார்…