Mon. May 20th, 2024

நடிகர் ரஜினிகாந்தின் ஒவ்வொரு செயல்களையும் தோலுரித்துக் காட்ட தயங்காதவராக இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ரஜினியை தைரியமாக கலாய்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை, ரஜினியின் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்தவர்களும் கரித்துக் கொட்டினார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், சந்தர்ப்பவாதமாகவும், சுயநலத்துடனும் செயல்படும் ரஜினிகாந்தை ஒவ்வொரு முறையும் ஓங்கி முகத்தில் குத்தும் வகையில், முதல் நபராக ரஜினிக்கு எதிராக ஆவேசமாக பொங்குவதுடன் ரஜினியின் மூகமுடிகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்து எறிகிறார்.

ரஜினிகாந்த் அமெரிக்க புறப்பட்டுச் சென்றவுடனேயே, அவரை காட்டமாக தாக்கி தனது டிவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டிருந்தார். அதில், கொரோனோ தொற்றுக் காலத்தில் அமெரிக்காவுக்கு வெளிநாட்டு பயணிகள் யாரும் வரக் கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. ரஜினிக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி கிடைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பினார் கஸ்தூரி.

மருத்துவ சிகிச்சைக்காகதான் அமெரிக்கா செல்கிறார் ரஜினி என்றால், இந்தியாவில் இருக்கிற மருத்துவர்கள் எல்லாம் தகுதியானவர்கள் இல்லையா? கொரோனோ தொற்று காலத்தில் அவசர நேரங்களில் கூட மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் போது, ரஜினி மட்டும் அமெரிக்க செல்ல எப்படி அனுமதி கிடைத்தது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதானே. இந்திய சட்டத்தை விட உயர்ந்தவரா ரஜினி என பல கேள்விகளை கேட்டிருந்தார்.

ரஜினிக்கு எதிரான நடிகை கஸ்தூரியின் அடுக்கான கேள்விகளைப் பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.

கஸ்தூரியின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும், உண்மை தன்மையையும் பார்க்காமல் வழக்கம் போல ரஜினி ரசிகர்கள், கஸ்தூரியை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனாலும் ரஜினியின் பச்சோந்திதனத்தை தோலுரித்துக் காட்ட தயங்காமல் தனது அதிரடியை காட்டிக் கொண்டே இருக்கிறார் நடிகை கஸ்தூரி. இந்த வகையில், உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம், கஸ்தூரிக்குதான் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் ரஜினியின் திரையுலக நலம் விரும்பிகள்.

இன்றைக்கு ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததே சுயநலத்திற்காகதான் என்று அனைத்து தளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தனது திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் கூட்டத்தை கூட்டி தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதை தனது பிழைப்பு வாதமாக வைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

தான் எப்போதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை ஒரு வீடியோ அறிவிப்பு மூலம் வெளியிட்டு இருக்கலாம் நடிகர் ரஜினிகாந்த் என்பதுதான் நடிகை கஸ்தூரி போன்ற சமூக நலனில் அக்கறையுள்ளவர்களின் கோபமாக உள்ளது.

கொரோனோ பெருந்தொற்றின் 2 வது அலை இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையிலும், கன்னியாகுமரி உள்ளிட்ட கடைக்கோடி மாவட்டங்களில் இருந்தெல்லாம் அவரது ரசிகர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து, சென்னைக்கு வந்தனர்.

நம்ப வைத்து, நம்ப வைத்து ரசிகர்களின் கழுத்தை அறுப்பதை நடிகர் ரஜினிகாந்த் வாடிக்கையாக வைத்திருக்கிறார். நடிகர் விவேக் போல, தமிழ் சமுதாயத்தின் மீதும், மனிதர்கள் மீதும் துளியும் அன்பு இல்லாத நடிகர் ரஜினிகாந்த், தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து போய் தனி விமானத்தை ஏற்பாடு செய்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து அமெரிக்காவுக்கு பறந்து மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

ஆனால், ஒவ்வொரு படத்திலும் தன் உயிரைவிட தன்னை வாழ வைத்த தமிழக மக்கள்தான் மேலானவர்கள் என்ற வெற்று டயலாக்கை மட்டும் விடுவதே இல்லை.

கொரோனோ தொற்று நெருக்கடியை சமாளிக்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி திரட்டிய போது, வெறும் 25 லட்சம் ரூபாயை கொடுத்த மாபெரும் வள்ளல்தான் நடிகர் ரஜினிகாந்த். இவரை விட குறைந்தளவு சம்பளம் வாங்கும் நடிகர்களே, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அதிகளவு நிதியை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக வாங்கும் ரஜினிகாந்த், தன்னை இவ்வளவு உயரத்திற்கு உயர்த்தி வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு வெறும் 25 லட்சத்தை மட்டுமே நன்கொடையாக வழங்கி புண்ணியம் தேடிக் கொண்டார்.

அரசியல் கட்சி தொடங்கி, தமிழ்நாட்டில் புரட்சியை ஏற்படுத்துகிறேன் என்று கூக்குரலிட்ட ரஜினியை நம்பி, அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத அவரது ரசிகர்கள், கடன் வாங்கி எல்லாம் பூத் கமிட்டி அமைத்து, நொந்து போய் விட்டார்கள்.

ரஜினியின் கோமாளித்தனத்தால், ஊர் முழுவதும் அவரது ரசிகர்களை பைத்தியக்காரர்களாகவே பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், ரஜினி ரசிகர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே, அவரது ரசிகர்கள்அவமானப்படும் நேரத்தில், அவரவர் குடும்பத்திற்குள்ளேயே அவர்களுக்கு மரியாதை இல்லை. இந்தநேரத்தில், தனது ரசிகர்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் ரஜினி செய்யும் துரோகச் செயல்கள் எத்தனை காலம்தான் நீடிக்குமோ?

திரைத்துறையில் உள்ள நடிகை கஸ்தூரி போன்றவர்கள் எத்தனை பேர் திரண்டு வந்து கரித்துக் கொட்டினாலும், ரஜினி தனது இயல்பை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதற்கு இன்றைய நிகழ்வே ஒரு சிறந்த உதாரணம்….