Sun. May 19th, 2024

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு. க. ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று அறிவித்தார்.. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பத்திரகையாளர்கள் சங்கங்கள் தமிழக அரசுக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தி இந்து நாளிதழ் குழுமம் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த ஊடகவியாளருமான என். ராம், நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் முதல்வர் மு. க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு இதோ…

DIPR-P.R.No_.336-Honble-CM-Press-Release-Media-Freedom-Thanks-Date-27.06.2021