Sun. May 19th, 2024

2018 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டு உள்ளது ஊழல் எதுவும் நடைபெறவில்லை,இதுகுறித்து எந்த இடத்திலும் பதில் கூறுவதற்கு தயாராக உள்ளதாக முன்னால் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.ணிக்கை துறை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பது இழப்பே தவிர ஊழல் அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறியுள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பி.தங்கமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு மின்சாரத்துறையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கை துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஆளும்கட்சியினர் கூறியுள்ளார்கள். ஆனால் அதில் ஊழல் நடந்து உள்ளது போல பொய்யான கருத்துக்கள் வெளியாகி உள்ளது என்று பி.தங்கமணி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு துறையாக மட்டுமே உள்ளது,கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து பொருட்களும் விலையேற்றம் ஏற்பட்டு உள்ளன. மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இல்லாத அளவிற்கு மின்தடை இல்லாமல் மின்சாரம் வழங்குவதையே பிரதான நோக்கமாக அதிமுக அரசு கருதியது.

கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் ஒருமுறையும் உயர்த்தப்படவில்லை. பொதுமக்களுக்கு மாதம் மாதம் 100 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கி வருவதால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 11 லட்சம் குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. .
மேலும் நீண்டகால கொள்முதல் காரணத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. என்று கூறுவது பொய்.

திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் 31 ஆண்டுகள் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது .
மேலும் தணிக்கை துறை சார்பாக 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தணிக்கை துறை அனைத்து ஆட்சியிலும் இதுபோன்ற அறிக்கைகளை தாக்கல் செய்வது வழக்கமான ஒன்றுதான். தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிகின்ற நேரத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்ததாகவும் 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் நேரத்தில் அந்த கடன் 45 ஆயிரம் கோடியாக இருந்தது.

தற்போது இருக்கும் கடனில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு கடன் மட்டுமே என்றும தமிழகத்தில் அந்தந்த பணிகள் முடியும் நேரத்தில் அதன் மூலம் வருமானம் கிடைக்கும் என்றும் பி.தங்கமணி கூறினார்.
2015 ஆம் ஆண்டு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க நிறுவனங்கள்  தயாராக இருந்த நிலையில் 12 ரூபாய் 77 பைசாவிற்கு ஏன் ஒப்பந்தம் போடப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பி.தங்கமணி,
அந்த நேரத்தில் மின் தட்டுப்பாடு இருந்த காரணத்தாலும் அதே போன்று குறைவான விலைக்கு வழங்க தயாராக இருந்த நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்க தயாராக இருந்ததாகவும் தமிழகத்தின் தேவை அதிகமாக இருந்த காரணத்தால் 1 ஆண்டிற்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் பி.தங்கமணி தெரிவித்தார்.