Tue. May 7th, 2024

நடிகர் கமல்ஹாசனை தலைவராக கொண்டுள்ள மக்கள் நீதி மய்யத்தில் இருந்து, முன்னணிநிர்வாகிகள் பலர் விலகியுள்ளனர். கமலின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்த, கோவை தொழிலதிபர் மற்றும் கமலின் வலதுகரமாக செயல்பட்டு வந்த மகேந்திரன், துணைத்தலைவர் பதவியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவி வரை அனைத்திலும் இருந்து விலகியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் நடிகர் கமல்ஹாசனின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்றும் இனியும் அவர் மாறுவார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் மகேந்திரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், தேர்தலுக்கு முன்பாக நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்த மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன் ராஜும் மநீம.த்தில் இருந்து விலகியுள்ளார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பொதுச் செயலாளர்கள் சந்தோஷ் பாபு, மவுரியா, குமரவேல், முருகானந்தம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்..

மநீம. த்தில் இருந்து அடுத்தடுத்து விலகிய நிர்வாகிகள் தொடர்பாக, அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ…….

துணை தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள மகேந்திரன், நடிகர் கமல்ஹாசனுக்கு அனுப்பியுள்ள நான்கு பக்க கடிதம்…இதைகூட தமிழில் எழுத முடியவில்லை..இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை காக்க வந்துள்ள காவலர்கள்…. தமிழகத்தின் தலையெழுத்து….