Mon. Jun 9th, 2025

சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணிகை ஆகிய திருக்கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதிய திட்டத்திற்கான துவக்க விழா இன்று மூன்று கோயில்களிலும் நடைபெற்றது. இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.