Fri. May 17th, 2024

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர். விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள், நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, ரிஷாப் பான்ட் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்தும், மலர் மாலை சூடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கிரிக்கெட் போட்டியை முடித்துவிட்டு அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர். தமிழக வீரரான நடராஜன், விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.