Fri. May 3rd, 2024

டிராக்டர் பேரணி வழக்கில் திடீர் திருப்பம்

டிராக்டர் பேரணியை அனுமதிக்க டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் உள்ளதால், இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சிலைகள் மாயமான விவகாரம்

கோயில் சிலைகள் மாயமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்புயுள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் சிலைகள் மாயமாகியுள்ளது? என்றும் இதுதொடர்பாக, 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.