Thu. May 2nd, 2024

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5-ம் தேதி, சென்னை அரசுபொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 15 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் அவரது உடலில் முன்னேற்றம் இல்லை. இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அமைச்சர் காமராஜ், இன்று மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். எம்.ஜி.எம். மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.