Tue. May 21st, 2024

நாடு முழுவதும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி இன்று செலுத்தப்படுகிறது..இதனையொட்டி டெல்லியில் இந்த திட்டத்தை பிரதமர் மோடியை தொடங்கி வைத்து பேசினார்.. அப்போது அவர், முன்களப் பணியாளர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அதன் செலவுகளை மத்திய அரசு ஏற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் மிகுந்த பாதுகாப்பானவை என்றும் தடுப்பூசி போட்டு க் கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்..