Wed. May 1st, 2024

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலையில் ஆரவாரத்துடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில், 800 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து திறந்துவிடப்படும் காளைளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மடக்கி பிடிக்க தீரத்துடன் போராடி வரும் காட்சியை, பார்வையாளர்கள் கைதட்டி ரசித்து வருகின்றனர்.