Tue. May 21st, 2024

குடியரசு நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முடிவு. தடை விதிக்க கோரி டெல்லி காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணி இன்று தொடங்குகிறது. வடமாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் மகர சங்கராந்தி நாளான இன்று தொழிலாளர்கள் தங்கள் பணியை தொடங்குகிறார்கள். புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 11 ம் தேதி நடைபெற்றது என்பது நினைவுக்கூரத்தக்கது.

கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 6 மணியளவில் மகரஜோதி ஆராதனை நடைபெறவுள்ளது. கொரோனோ கட்டுப்பாட்டின் காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பம்மை நதிக்கரையோரம் பெரியானை வட்டத்தில் முகாமிட்டுள்ள திரு ஆபரண குழுவினர் இன்று பிற்பகலில் சிறப்பு ஆராதனைக்குப் பிறகு நீலிமலை, சபரி பீடம், சரக்குத்தி வழியாக சந்நிதானத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.