Tue. May 21st, 2024

கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்டீல் ஹைப்பர் இண்டியா என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாக பெற்ற 200 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள அலுவலகங்களில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.