Wed. May 22nd, 2024

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா களைகட்டியுள்ளது. உழவருக்கும், உழவுக்கும் அடிநாதமாக விளங்கும் இயற்கை அதிசயங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சூரியனுக்கு பொங்கல் வைத்து வணங்கி பொங்கல் திருநாளை உற்சாகமாக பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர்.

பொங்கல் திருவிழாவின் கொண்டாட்டமாக, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே பார்வையார்கள், ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். வாடி வாசலில் இருந்து திறந்துவிடப்படும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு விரட்டி விரட்டி மடக்கிப் பிடித்து தங்கள் வீரத்தை பறைச் சாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அனல் பறக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உற்சாகமாக கண்டு களித்து வருகின்றனர். இருவரின் சார்பில் மாடி பிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு சிறப்புப் பரிசுகள் வழங்கபடுகின்றன.

உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.