Tue. May 7th, 2024

பெங்களுரூவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி. நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவளி, முருகேஷ் நிரானி, ஆர். சங்கர், சி.பி. யோகேஷ்வரா, எஸ். அங்காரா ஆகிய 7 பேருக்கு ஆளுநர் விஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு மூன்று முறை அவரது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.