Tue. May 7th, 2024

மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்கவர் பொங்கல் விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு பொதுமக்கள் உற்சாகம்…

தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி, பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். பின் ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து உறியடி (பானை உடைத்தல்) விளையாட்டிலும் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆயுதப்படை காவலர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கியதோடு கரும்பு மற்றும் மஞ்சள் குலைகள் வழங்கினார். பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.