Wed. May 22nd, 2024

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலையில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக, ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு எண்ணைய், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பால், தயிர் மற்றும் சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலையில் காவிபட்டு உடுத்தி ராஜ அலங்காரத்திலும், ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாமக்கல் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள், மனமுருக ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாரம் வழங்கப்பட்டது.