Wed. May 22nd, 2024

சென்னையில் துக்ளக் வார இதழ் சார்பில் வரும் 14 ஆம் தேதி ஆண்டு விழா கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, ஜே.பி.நட்டா வரும் 14 ஆம் தேதி வருகிறார். துக்ளக் விழாவில் கலந்துகொண்ட பிறகு அவர், தமிழக பா.ஜ.க. தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் வரும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

Bihar, Oct 23 (ANI): Congress leader Rahul Gandhi addresses an election rally ahead of the Bihar Assembly Elections in Hisua, Nawada on Friday. (ANI Photo)

இதேபோல, அதே நாளில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியும் ஜன.14 ஆம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் அவனியாபுரத்தில் நடைபெறும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் பார்வையிடுகிறார். தொடர்ந்து மதுரையில் அவர் தமிழக காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.