Tue. Apr 30th, 2024

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று நண்பகலில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..மூவர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைப் பற்றி அ.தி.மு.க தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்நடவில்லை..ஆனால், வன்னியருக்கான தனி ஒதுக்கீடு பற்றி பேசியதுடன் கூட்டணியை உறுதி செய்ததுடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல் கசிய விடப்பட்டது..இப்படியொரு தகவல் அ.தி.மு.க தரப்பில் இருந்து பரப்பப்படுகிறது என்பதை கேள்விப்பட்ட டாக்டர் ராமதாஸ், இந்த மாதிரியான பேச்சுக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பா.ம.க முக்கிய நிர்வாகிகளிடம் கூறினாராம்.. இதனையடுத்து பா.ம.க தரப்பில் இருந்து முக்கியமான சில ஊடகவியலாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் முக்கியமாக இட ஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசப்பட்டது.. அ.தி.மு.க.வுடனான கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் எந்த உறுதியையும் தரவில்லை என வலிந்து தகவல் தந்துள்ளார்.. ஆக, அ.தி.மு.க.வுடனான கூட்டணி என்ற பேச்சு பரப்பப்படுவதை டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை.. அவர் மனதில் வேற கணக்கை வைத்திருக்கிறார்..அதுதொடர்பாக அவருக்கு சிக்னல் கிடைத்த பிறகே பா.ம.க யாரோடு கூட்டணி என்பதை பகிரங்கமாக அறிவிப்பார் என அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் தெரிவித்தனர்…