Fri. May 17th, 2024

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் அண்மையில் இடிக்கப்பட்டது. இந்தச் செயலுக்கு தமிழகத் தலைவர்கள் உள்பட உலகம் முழுவதும் புலம்பெயர்ந்த உள்ள தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்திருந்தபடி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர். இலங்கை அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை வழியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சிறிதுநேரத்திற்குப் பிறகு அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர்.