Fri. May 17th, 2024

தமிகத்தில் அ.தி.மு.க.தான் பெரியக் கட்சி என்பதால், முதலமைச்சர் வேட்பாளரை அக்கட்சியே தீர்மானிக்கும் என்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி தான் பெரிய கட்சி என்பதால், முதல்வர் வேட்பாளர் குறித்து அக்கட்சிதான் முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தே.மு.தி.க தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால், வரும் தேர்தலில் தங்களது கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார். இந்த நிமிடம் வரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் தே.மு.தி.க உள்ளதாகவும் பிரேமலதா கூறினார்.