Wed. May 1st, 2024

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் கோவில் யானை புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை கொடூரமாக பாகன்கள் தாக்கும் வீடியோ இதோ…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள் யானைகள் புத்துணர்வு முகாமில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து அழைத்துவரப்பட்ட யானைகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள ஒரு கோயில் யானையை காட்டுமிரண்டாடிகளான மாறிப் போன இரண்டு பாகர்கள், வலி தாங்காமல் அந்த யானை பிளிறும் போதும்கூட விடாமல் அடித்து துன்புறுத்துகிறார்கள்.
என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் விலங்க நல அலுவலர்கள்.-? திரைப்படங்களில் உயிரோடு ஒரு பாம்பை காட்டினாலே ஓடோடி வரும் அந்த விலங்கு நல ஆர்வலர்கள் எங்கே போனார்கள்?