Wed. Apr 24th, 2024

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்வதற்கு முன்பாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென்று சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு மாநகராட்சி நிர்வாகப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு கோரிக்கை மனுக்களோடு வந்த பொதுமக்களை அழைத்துப் பேசிய முதல்வர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதல்வரின் திடீர் வருகையால் மாநகராட்சி அதிகாரிகள் திகைத்து நின்ற வேளையில், முதல்வரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்த மக்கள் திக்குமுக்காடி போனார்கள்.

முதல்வரின் மாநகராட்சி ஆய்வு குறிதது அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ: