Thu. Apr 25th, 2024

பல்வேறு இடங்களில்புதன் – வியாழக்கிழமை சூறாவளி பரப்புரை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் புதன்கிழமை (06.01.21) மேற்கொள்ள இருக்கிறார்.

காலை 9 மணிக்கு பவானியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 10 மணிக்கு சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடும் முதல்வர், காலை 11 மணிக்கு அந்தியூரில் பொதுக்கூட்டம், பகல் 12 மணிக்கு வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.இரவு 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

ஜன. 7ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுக்கூட்டம், தொடர்ந்து தொழில் முனைவோர், வக்கீல்கள், டாக்டர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 4 மணிக்கு ஓடாநிலையில் பொதுக்கூட்டம், அரச்சலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடல், பெருந்துறையில் கைத்தறி தொழில் முனைவோர், உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார். இரவு 7.30 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.