Fri. May 17th, 2024

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவதற்கு கடைசி நேரத்தில் கூட சிக்கல் ஏற்படுத்தப்படும் என்பதால் பொறுமை காத்து வந்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்.

இன்று காலையில் சசிகலாவின் விடுதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, பெங்களூரில் முகாமிட்டுள்ள டி.டி.வி.தினகரன், தனது வழக்கமான தடாலடியை மீண்டும் துவங்கிவிட்டார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சசிகலா வருகையை கொண்டாடும் விதமாகவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாக கொளுத்திப் போட்டார்.

மேலும் பேசிய டி.டி.வி.தினகரன், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு சசிகலாவை வீட்டிற்கு அழைத்து செல்வோம் என்றும் அதிமுகவை மீட்டெடுத்து உண்மையான அம்மா ஆட்சியை கொடுப்போம் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.