கொரோனோ தொற்றுப் பாதிப்புக்கு உள்ளான உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையின் காரணமாக, அவரது ஆக்சிஜன் அளவு அதிகரித்து வருவதால், அவரது உடல்நிலை வெகுவேகமாக முன்னேற்றம் அடைந்து வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
உடல் சமநிலையை பொறுத்தும், கொரோனோ தொற்றில் இருந்து பூரண குணமடைந்துவிட்டார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அமைச்சர் காமராஜ் விரைவில் வீடு திரும்புவார் என தகவல்