Fri. May 17th, 2024

4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்ய சீர்காழி காவல்துறைக்கு டி.ஜி.பி. திரிபாதி பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை செய்து 16 கிலோ நகை கொள்ளையடித்த கும்பலை 4 மணிநேரத்தில் என்கவுன்டர் செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளது, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றள்ளது.

சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த வட இந்திய கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 16 கிலோ நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் மணிப்பால், மணிஷ், ரமேஷ்
ஆகியோர் தப்ப முயன்ற போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுன்ட்டரில் ஒருவர் பலியாகிவிட, மற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் நடந்த .4 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை பிடித்த மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார். .